கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பார்வையாளர்களுக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்று குதூகலமாக அங்குள்ள வளங்களை அனுபவிக்கின்றனர்.
இயற்கையான கடலையும் அதன் அலையையும் ஓரளவு கட்டுப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ரம்யமான கடற்கரை மற்றும் அதில் உள்ள விளையாட்டுக்கள், மற்றும் உணவகங்களை பார்வையிடவே மக்கள் வரிசையாக செல்கின்றனர்.
காலி முகத்திடல் ஆரம்பத்தில் இருந்து குறித்த கடற்கரைக்கு செல்ல 5 கிலோ மீட்டர்கள் செல்ல வேண்டியுள்ளது. அதனாலயே இந்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த இடத்தை நாசமாக்கி விட்டு சென்றுள்ளதால், இனிமேல் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் அல்லது நடந்து செல்லவோ அனுமதி வழங்கப்படமாட்டாது என அங்குள்ள பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
எனவே இனிமேல் கொழும்பு துறைமுக நகர கடற்கரைக்கு போவதாக இருந்தால் வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்.