தமிழர் பகுதியில் 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா மோசடி : போலி முகவர் கைது

tubetamil
0

 மட்டக்களப்பில் டுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

போலி முகவர் ஒருவர் டுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி ஒருவரிடம் தலா ஒரு இலட்சத்து 35 ஆயிரம் வரை150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ளார்.

குறித்த போலி முகவர் வீட்டை நேற்று (10 .08.2023) பாதிக்ப்பட்டவர்கள் முற்றுகையிட்டு அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியில் அவரது உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்து,  நிறுவனம் ஒன்றின் சந்தைபடுத்தல் குழு தலைவர் என்ற போலி அடையாள அட்டையை தயாரித்துள்ளார்.

பொலிஸார் விசாரணை 

இந்த அடையாள அட்டையை காட்டி டுபாய்க்கு குறித்த நிறுவனத்தின் அனுசரணையுடன் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் வேலைக்கு அனுப்புவதாக கூறியே இவ்வாறு பண மோசடி செய்துள்ளார். 

இந்த வெளிநாட்டு முகவர் தொடர்பாக சின்ன ஊறணியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஒருவர் அறிந்த நிலையில் அவரின் நண்பர்கள் உட்பட 40 பேரை சேர்த்து அந்த போலி முகவிடம் அழைத்துச் சென்று தலா ஒருவருக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வீதம் 48 இலட்சம் ரூபாவை சட்டத்தரணி மூலம் ஒப்பந்தம் செய்து பணத்தை வழங்கியுள்ளார்.

இதில் கிளிநொச்சி முளங்காவில், மட்டக்களப்பு நகர், கல்லடி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, கொக்குவில் உட்பட பல்வேறுபட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட 150 க்கு மேற்பட்டவர்கள் குறித்த போலி முகவரை சந்தித்துள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த  நடவடிக்கை 

இந்நிலையில் மட்டக்களப்பு கூட்டுறவு சங்க கட்டட மண்டபத்தை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து அங்கு அனைவரையும் வரவழைத்து அவர்களின் ஆவணங்களை பரிசோதனை செய்து ஒரு போலி ஒப்பந்தம் செய்து கொண்டு முதலில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை முற்பணமாக செலுத்துமாறும் மிகுதியை வெளிநாடு சென்றதும் தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 


இதனையடுத்து போலி முகவரிடம் பணம் கொடுத்த 60ற்கும் மேற்பட்டோர் குற்ற விசாரணை பிரிவு காரியாலயத்தின் முன் ஒன்றுகூடி காத்திருந்தபோது அங்கு முகவர் வராததையடுத்து ஒரு குழுவினர் முகவரின் நாவற்குடா வீட்டை முற்றகையிட்டு அவரை பிடித்து  பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்டவர் சுமார் 150 க்கு மேற்பட்டவர்களிடம் 2 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்  விசாரணையின் பின்னர் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top