தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (15.08.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின் கம்பத்தில் மோதி அவர் மீது விழுந்ததால் அவர் இறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 54 வயதுடைய செனரத் மாரகந்த என்ற பாதுகாப்பு அதிகாரேியே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் 54 வயதுடைய செனரத் மாரகந்த என்ற பாதுகாப்பு அதிகாரேியே உயிரிழந்துள்ளார்.
பலத்த காயங்களுக்குள்ளான அதிகாரி
சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் மாலை 5:30 மணியளவில் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.