தடுப்பூசியால் குழந்தையின் உயிரை பறிகொடுத்த பெற்றோர்கள்..!

keerthi
0

 



தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்த செய்தி வெலிகம – நலவன பகுதியில் பதிவாகியுள்ளது.

அதாவது குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானமையே இறப்புக்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்தோடு கடந்த 2 ஆம் திகதி நான்கு மாதத்திற்கான தடுப்பூசி, வெலிபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் குறித்த குழந்தைக்கு செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட கடும் குளிர் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே இறந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் நாடாளுமன்றில் விவாதிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top