மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் - 500 பேர் உயிரிழப்பு..!

keerthi
0



காசாலுள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 500 பேர் உயிரிழந்துவிட்டதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.


ஆனால் இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்டுகள் தான் தவறி மருத்துவமனை மீது விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை கூறியுள்ளது.


அத்தோடு  காசாவில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசா முனையின் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டு இருக்கிறது.


இதனால் பீதி அடைந்த பொதுமக்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு ஐநா.சபை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு பதுங்குக் குழிகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top