வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு நேற்றைய தினம் தொழுகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு , இந்த சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.