வவுனியா இராணுவ முகாமுக்கு அருகில் விபத்து ..!

keerthi
0





வவுனியா - பம்பைமடு இராணுவ முகாமுக்கு அருகில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.


அத்தோடு, குறித்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


குருக்கள் புதுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த உந்துருளி, மாடொன்றின் மீது மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


எனினும் குறித்த விபத்தில் உந்துருளியில் பயணித்த 45 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்தார்.


இவ் விபத்தில் காயமடைந்த 22 வயதுடைய அவரது மகன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top