முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம்...!

keerthi
0

 





முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அஹுங்கல்ல நகரில் இன்று(11) புதன்கிழமை  காலை முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த நபர் மீது  காரில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத்  தப்பிச் சென்றுள்ளனர்.


எனினும் குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் படுகாயமடைந்த 32 வயதான கொஸ்கொட – நூபே பகுதியைச் சேர்ந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இதேவேளை கடந்த சில மாதங்களாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் அச்சத்துடன் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top