நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

keerthi
0

 




காலி - பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தையொன்று உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அத்தோடு தமது பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


தாம் தங்கியிருந்த விடுதி அறையில் குழந்தை இல்லாதிருப்பதை அவதானித்த பெற்றோர், மேற்கொண்ட தேடுதலை அடுத்து நீச்சல் தடாகத்திலிருந்து குறித்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.


மேலும் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கொழும்பு - தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top