ஆபத்தான நிலையில் இருக்கும் பல பாடசாலைகளின் கட்டடங்கள்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு

keerthi
0



ஆபத்தான கட்டட பகுதிகள் தொடர்பில் குறித்த பாடசாலைகளின் நிர்வாகம் அவதானமாக இருக்க வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.


மேலும் இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும், பாடசாலைகளில் அமைந்துள்ள ஆபத்தான கட்டடங்கள் தொடர்பில் பாடசாலை நிர்வாகங்கள் அவதானமாக இருக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரி மற்றும் தங்காலை பாலிகா வித்தியாலயம் உட்பட 74 பாடசாலைகள் கட்டடங்கள் ஆபத்தான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.


அத்தோடு இக்கட்டடங்களில் இருந்து மாணவர்களை வெளியேற்றுமாறு குறித்த பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த கட்டடங்கள் புனரமைக்கப்படும் வரை மாணவர்களுக்கு புதிய மாற்று இடம் வழங்கப்படவுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top