நான்கு பேருக்கு மரண தண்டனை விதிப்பு

keerthi
0




நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.


அதாவது பிட்டிகல - அமுகொடை பிரதசத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு, வாள் மற்றும் பொல்லுகளினால் தாக்கி ஒருவரை கொலை  செய்து மேலும் ஒருவரை காயப்படுத்திய கொலை குற்றச் செயல்கள் தொடர்பாக பலப்பிட்டி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் நான்கு பிரதிவாதிகளுக்கு நேற்று (22) மரண தண்டனை விதிக்கப்பட்டது. 


அத்தோடு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தெஹிவளை, மொரட்டுவை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top