கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளில் 104 பேர் கைது..!!

tubetamil
0

 கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளில் 104 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


தப்பிச்சென்ற ஏனைய கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று மாலை குறித்த நிலையத்தில் இருந்து சுமார் 140 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் அமைந்துள்ள பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்பான தகவல்கள் ஆராயப்பட்டு வருவதாக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top