பதுளை - அம்பகஸ்தோவ பகுதியில் தோட்டமொன்றில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது தோட்டத்திற்கு அருகில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி அமைத்திருந்த மின்சார வேலியில் சிக்கியதால் குறித்த நபர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பகஸ்தோவ, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தோட்டத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.