ரயில் பயணிகளே கவனித்தீர்களா..!!

tubetamil
0

 தடம்புரண்ட டிக்கிரி மெனிகே ரயிலை தண்டவாளத்தில் ஏற்றும் பணியை நாவலப்பிட்டி ரயில் பராமரிப்பு திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்துள்ளதுடன், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் ஏற்றும் வரை கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையத்திலும்,  பதுளையிலிருந்து  கொழும்பு கோட்டை வரை இயக்கப்படும் ரயில்கள் கொட்டகலை ​ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுமென கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளதுநானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த டிக்கிரி மெனிகே பயணிகள் ரயில் ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் 109 ¼ மைல் கல்லுக்கு  அருகில் தடம் புரண்டது.

ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று (21)  காலை 7.15 மணியளவில்,  தடம் புரண்டது, தடம் புரண்ட பெட்டிகளில் ஒன்று   ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் மோதியதால், கட்டிடத்திற்கும் ரயில் தண்டவாளத்துக்கும்  பலத்த சேதம் ஏற்பட்டது.

ரயிலில் பயணிப்பவர்கள், ஹட்டன்-கொட்டக்கலைக்கு இடையில், ரயில் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் பஸ் சேவைகளில்  ஏறி   இரண்டு ரயில் நிலையங்களுக்கும் இடையில் மாறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top