நாட்டின் புதிய பாதுகாப்பு செயலாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான நியமனம் ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய பாதுகாப்பு செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இலங்கையின் 20ஆவது இராணுவத் தளபதியாக கடமையாற்றினார்.
இவர் இலங்கை ஆயுதப்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராணுவ தளபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.