நடிகர் ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம்- ஓபனாக கூறிய சீரியல் நடிகை ஷபானா

keerthi
0



 ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி வெற்றிகரமாக முடிந்தும்விட்டது. 

ரசிகர்கள் போதும் அய்யா முடித்துவிடுங்கள் என்று கெஞ்சும் அளவிற்கு கொஞ்சம் சீரியலை இழுத்துவிட்டார்கள், ஆனால் ஆரம்பத்தில் தொடருக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. 

இந்த தொடரை முடித்த கையோடு  நடிகை சபானா  அடுத்த தொடரிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். 

சன் தொலைக்காட்சியில் மிஸ்டர் மனைவி என்ற தொடரில் ஷபானா நடிக்கிறார், ஆனால் தொடர் TRP பெறவில்லை என்பதால் முடியப்போகிறது என்கின்றனர், ஆனால் எந்த அளவிற்கு உண்மை தகவல் வருகிறது என்பது தெரியவில்லை.

இவர் பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பத்தில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஷபானா பேசும்போது, செம்பருத்தி சீரியலில் இந்து பெண்ணாக நடித்ததற்காகவும், பொட்டு வைத்துக் கொண்டதற்காகவும் என்னுடைய குடும்பத்தினர் ஒரு ஆண்டுகாலம் என்னுடன் பேசவில்லை. 

இந்துப் பையனை திருமணம் செய்யக் கூடாது என்று அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்திய நிலையில், அதற்காகவே தான் ஒரு இந்து பையனை திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்ததாகவும் ஆர்யனை காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டதாகவும் ஷபானா  குறிப்பிட்டுள்ளார்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top