உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டடம் பிரதமர் மோடியால் திறந்து வைப்பு

keerthi
0

 


உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமான சூரத் வைர வர்த்தக மையம் இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமாக இருந்த அமெரிக்க இராணுவ தலைமையமாக பென்டகனை காட்டிலும் சூரத் வைர வர்த்தக மைய கட்டடம் பெரியது என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன்  இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டடமாக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

இந்தியா - குஜராத்தின் சூரத் நகரில் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

அதாவது    டில்லியைச் சேர்ந்த கட்டடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் 4 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் கட்டி முடித்துள்ளது.  

இந்த அலுவலக கட்டட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி ஆகும். 

அத்தோடு, 4,700 அலுவலகங்கள் உள்ள இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரில், உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகிறது.

 அதாவது   வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் விதமாக, 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மிகப் பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top