கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நேற்றைய தினம் (17) மேற்கொள்ளப்பட்ட விசேடதேடுதல் நடவடிக்கையின் போது சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதலை மேற்கொண்ட போது சுமார் சுமார் 68 கிலோவுக்கு மேற்பட்ட 30 பொதிகள் கொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன. இக் கேரள
கஞ்சா பொதிகள் வீடு ஒன்றின் சீலிங் பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது சந்தேகத்தின் பெயரில் வீட்டுரிமையாளரான பெண் ஒருவர் கைது
செய்யப்பட்டள்ளார்.