புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு ஒருவர் காயம்..!!

tubetamil
0

 புத்தளம் - கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் நேற்று (30) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில், பாவட்டாமடுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காயம் அடைந்தவர், பெண் ஒருவருடன் இரகசிய தொடர்பில் இருந்ததாகவும், விசாரணையில் அந்த பெண்ணுடன் தொடர்புடைய மற்றொரு நபர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் தற்போது அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top