ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஸ்கோடி அகதி அந்தஸ்து கோரி சென்றுள்ளனர்..!!

tubetamil
0

 ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஸ்கோடி அகதி அந்தஸ்து கோரி சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடரும் பொருளாதார நெருக்கடியால் 3 குழந்தைகள் உட்பட  ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தனுஸ்கோடி ஒன்றும் மணல் திட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும்சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல்  இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை வவுனியா  மாவட்டம் நெடுங்குழி பகுதியை நந்தகுமார்  அவரது மனைவி நித்யா மற்றம் அவரது 3 குழந்தைகள் 
 என ஒரே குடும்பத்தை சேர்ரந்த மொத்தமாக 5 பேர் நேற்று மாலை மன்னாரில் இருந்து ரூ.1.50லட்சம்  கொடுத்து பைப்பர்  படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள  தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையில் சென்றுள்ளனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சற்று குறைந்த வந்த நிலையில் தற்போது மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளுடன்  இலங்கையில் வாழ வழி இன்றி  தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக  தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை  293 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top