அதிவேக நெடுஞ்சாலையில் குறைந்தபட்ச வேகத்தை விட குறைவான வேகத்தில் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பதிவாகும் பெரும்பாலான விபத்துகளுக்கு ஓட்டுனர்கள் குறைந்த வேகத்தில் வாகனம் ஓட்டுவதாலேயே ஏற்படுவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, அதிவேகமாக வாகனம் செலுத்துவது தொடர்பில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார்.