யாழில் தவறான முடிவெடுத்த மாற்றுதிறனாளி: கனேடிய விசாவால் ஏற்பட்டுள்ள துயரம்..!

keerthi
0


  யாழில்  மாற்றுதிறனாளி ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ளார். 

அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் என்ற 32 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணைகளின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்தவரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வரும் நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது.எனினும் குறித்த நபருக்குக் கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை.

இவ்வாறுஇருக்கையில் அவர் தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு விபரீத முடிவெடுத்துள்ளார்.

எனினும்     அதனைதொடர்ந்து அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் நேற்று (12) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top