உரிமை மாற்றம் செய்த பெண் கைது..!!

tubetamil
0

 யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள காணியொன்றை மோசடியாக உரிமை மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பகுதியில் மூவருக்கு சொந்தமான காணி ஒன்றினை , ஒருவர் காலமான நிலையிலும்  , இன்னொருவர்  வெளிநாட்டில் வசித்து வந்த நிலையிலும் ,  மற்றையவர் தனது பெயருக்கு காணியை உரிமை மாற்றம் செய்துக்கொண்டுள்ளார் .


இது தொடர்பில் அறிந்து கொண்ட   வெளிநாட்டில் வசித்து வந்த  நபர் , தனக்கு தெரியாமல் தனக்கு சொந்தமான காணியை உரிமை மாற்றம் செய்து  மோசடியில் ஈடுபட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோசடியான முறையில் காணி உரிமை மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்து விசாரணைகளை  மேற்கொண்டு  வருகின்றனர்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top