கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை..!!

tubetamil
0

 கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 31 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (28) காலை உயிரிழந்துள்ளார்.

லுணுகம்வெஹர பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top