யாழ் - அம்பன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிப்பு, உழவு இயந்திரங்களும் விடுவிப்பு..!!

tubetamil
0

 பௌர்ணமி, மற்றும் ஞாயிறு விடுமுறை தினமான கடந்த 24/03/2024 அன்று மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் நேற்று திங்கட்கிழமை தலா ஒருலட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


24/03/2024  அன்று சிறப்பு அதிரடி படையினரால் ஆறு உழவு இயந்திரங்களுடன் , ஆறு சாரதிகளும் கைது செய்யப்பட்டு மருதங்கேணி பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையிலே அன்றைய தினமே மருதங்கேணி போலீசாரால் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.



இந்நிலையில் நேற்று 01/4/2024 பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு இடம் பெற்றவேளை தலா ஒருலட்சம் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதுடன்  உழவு இயந்திரங்களில் இருந்த மணல்மண் நீதிமன்றின் பொறுப்பில் எடுக்கப்பட்டு உழவு இயந்திரங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 22/04/2024 அன்று வழக்கிற்க்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகையிலை விடுவிக்கப்பட்ட உழவு இயந்திர சாரதிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்க்காக குடத்தனை அம்பன் ஊர் எல்லை பகுதியிலிருந்து  அம்பன் கிழக்கிலுள்ள ஒவ்வொருவரது வீட்டு வாசல்களிலும் வெடிகளை கொழுத்துயுள்ளர்.

இதனால் அப்பகுதி சிறுவர்கள் பெருதும் அச்சமடைந்துள்ளதுடன் மக்கள் நடப்பது ஏன்னவென்று புரியாது திகைத்துள்ளனர்.

இதேவேளை  கடந்த 24/03/2024 அன்று காலை 6:00 மணிக்கு ஆரம்பமான மணல் அகழ்வில் 100க்கு மேற்பட்ட மணல் சுமைகள் உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அச்சம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாதவர்கள் எமக்கு குறிப்பிட்டனர்.
இதேவேளை அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரால் கிராம மக்களின் ஆதரவு அல்லது தீர்மானம் இன்றி ஆளும் கட்சி வேட்பாளரான முத்தழகன் தலமையில் மேற்கொள்ள படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top