சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு..!!

tubetamil
0

 சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில், 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு கூறியுள்ளது.

இவற்றில், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேஸ்புக் ஊடான மோசடிகளே அதிகரித்துள்ள தாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில்,​​இணையத்தளம் ஊடான மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளில், சற்று அதிகரிப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top