கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு..!!

tubetamil
0

 மூதூர் - பஹ்ரியா நகர் களப்பிலிருந்து நேற்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

மூதூர் - பஹ்ரியா நகரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவரின் கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்டு மணல் மூடையொன்றும் வயிற்றில் கட்டப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top