eZ Cash மற்றும் M Cash மூலம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தியோர் கைது!

keerthi
0

 


eZ Cash மற்றும் M Cash ஆகியவற்றைப் பயன்படுத்தி போதைப்பொருளுக்கு பணம் செலுத்துவோரைக் கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் திரு.தேஷபந்து தென்னகோனின் பணிப்புரையின்படி கடந்த  06ம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய சமூகத்தில் பணம் கொடுத்து போதைப்பொருள் வாங்குகின்றனர்.

அதன்படி நேற்றைய தினம் (08) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது eZ Cash மற்றும் M Cash ஆகியவற்றைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 153 பேரிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

அத்தோடு   15 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வங்கிக் கணக்கு பதிவுகள் மற்றும் 45 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தொலைபேசி கோபுர பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top