முல்லைத்தீவு ஏ-09 வீதியில் ஒருவர் பலி..!

tubetamil
0

 முல்லைத்தீவு   ஏ - 09 வீதியின் திருமுருகண்டி - கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த விபத்தானது


        இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையர்ஸ் ரக வாகனம் ஒன்று பார ஊர்தி ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதன்போது, படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top