வீட்டுக்கு தீ வைத்த 14 வயது சிறுமி கைது...!!!

tubetamil
0

 பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து 14 வயது சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை லெய்செஸ்டரின் பெடேல் டிரைவ் பகுதியில், வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் அழைக்கப்பட்டனர்.

தீக்கிரையான முகவரியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய 14 வயது சிறுமி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்

அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சொத்தில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் 14 வயது சிறுமிக்கு தெரிந்தவர்களா என்பது குறித்த தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக திறந்த மனதுடன் ஆராய்ந்து வருவதாகவும் துப்பறியும் ஆய்வாளர் Michael Chandler தெரிவித்துள்ளார்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top