ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு!

tubetamil
0

 ஜேர்மனியின் முனிச் நகரில் சந்தேக நபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

1972ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் 'Black September' குழு நடத்திய தாக்குதலில், முனிச் ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட 11 இஸ்ரேலிய வீராங்கனைகள் கொல்லப்பட்டனர்.

இந்த துயர சம்பவத்தின் நினைவு நாளில், முனிச்சில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. 


சந்தேக நபர் ஒருவர் ஆயுதமேந்திய அதிகாரிகளால் சுடப்பட்டுள்ளார். ஆனால், அவரின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் தெரியவில்லை. 

முனிச் ஆவண மையத்தில் இருந்து சில மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இஸ்ரேலிய துணைத் தூதரகத்தின் முன்பு இச்சம்பவம் நடந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்த நடவடிக்கையை உறுதி செய்த முனிச் பொலிஸார், ஒரு சுற்றளவை அமைத்து ஹெலிகொப்டரை சம்பவ இடத்தில் நிலைநிறுத்தினர்.

ஒரு ஜேர்மன் பத்திரிகையாளர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகளில், சக்தி வாய்ந்த துப்பாக்கிச்சூடுகளின் சரமாரி சத்தம் கேட்கப்பட்டது. அவர் தனது குடியிருப்பின் சன்னலில் இருந்து அதனை படம்பிடித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top