அரசியல்வாதியை கைது செய்ய நடவடிக்கை....!

tubetamil
0

 ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படும் அமைச்சர் ஒருவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருந்த போதும், அவரின் கைது நடவடிக்கை, கடும் அழுத்தம் காரணமாக தடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய அமைச்சர் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து, கைது செய்வதை தடுக்குமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


விசாரணையின் போது கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு சட்டத்தை ஏமாற்றிய போதிலும் கைது செய்யப்பட்டு 7 மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top