ஓய்வை நிராகரித்த மகிந்த - மீண்டும் ஆட்டம் ஆரம்பம்

tubetamil
0

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியலில் ஏற்பட்ட  பாரிய மாற்றம் காரணமாக நிலைகுலைந்துள்ள நிலையில் தற்போது தான் அரசியலிலிருந்து ஓய்வு பெற போவதில்லை என அறிவித்துள்ளார்.


அரசியலில்  இருந்து ஓய்வு பெறவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில்  அண்மைக்காலமாக அநுர அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டு விசமர்சனங்களின் பின்னணியில், மகிந்த தன் முடிவை மாற்றியுள்ளதுடன், அரசியல் ஓய்வையும் நிராகரித்துள்ளார்.



அத்துடன் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றிக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேர்தலில் இலகுவான வெற்றியை பெற முடியும் என்ற நம்பிக்கையை மகிந்த நேற்று முன்தினம்  வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தற்காலிக  ஓய்வில் உள்ள போதும், அரசியல் இருந்து ஒருபோதும் விலகப் போவதில்லை என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சிரேஷ்ட அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிடாதவாறு விரட்டப்பட்டுள்ளதாகவும், அது தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ராஜபக்சர்கள் மீண்டும் அரசியலில் பிரகாசிப்பர் என்றும் மகிந்த சூளுரைத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top