வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்

tubetamil
0

 இலங்கையில் மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இன்றைய தினம் (26) வளிமண்டலவியல் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிதிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 



மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.


இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top