13 வயது சிறுவனுக்கு 1.10 கோடி; IPL இல் பெரிய போட்டி!

tubetamil
0

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெறும் ஏலத்தின் 2-வது நாளான இன்று 13 வயது ப்ளேயரான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கியுள்ளது.



ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் 2-வது நாளாக திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் 13 வயது சிறுவன் சூர்யவன்ஷிக்கு ரூ.30 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. அவரை தங்களது அணிகளுக்காக வாங்க ராஜஸ்தானும், டெல்லியும் போட்டி போட்டுக்கொண்டனர். டெல்லி தனது ஏலத்தை தொடங்கியது. ராஜஸ்தான் ரூ.45 லட்சம் கேட்க, டெல்லி ரூ.50 லட்சம் கோரியது. இறுதிவரை சென்ற ஏலத்தில் ரூ.1.10 கோடி கோரிய ராஜஸ்தான் சூர்யவன்ஷியை தனது அணிக்குள் இழுத்துக்கோம்டாமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top