மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு...!

tubetamil
0

 சிறிபுர - கலுகெலே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவிதுள்ளனர்.



குறித்த சம்பவத்தில் 34 வயதுடைய சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார் .


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தனது பிரதேசத்தில் சுய தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், யானையிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கியே இவ்வாறு மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்லதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top