கொழும்பில் மூதாட்டியின் சடலம் மீட்பு!

tubetamil
0

 கொழும்பு பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பியகம பிரதேசத்தில் இரத்தக் காயங்களுடன் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


75 முதல் 80 வயது மதிக்கத்தக்க, 5 அடி உயரமுடைய மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


அத்துடன் குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top