கதிர்காமம் பகுதியில் மனைவியின் கொலையில் சந்தேக நபர் கைது - கோடரியால் வெட்டியதாக தகவல்

tubetamil
0

கதிர்காமம் கொயாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மனைவியை கொலை செய்த கணவன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்படடுள்ளார்.



இது குறித்தது மேலும் தெரிய வருவதாவது, சந்தேக நபர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் சண்டையிட்ட நிலையில், கோடரியால் மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ள நிலையில் அவர் தானும் விஷம் அருந்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


அதனடிப்படையில் கைது செய்த அவரை ருத்துவமனையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



நிலந்த பிரதீப் குமார என்ற நபரே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.



அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


சந்தேக நபருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top