மீண்டும் முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்பட்ட 103 மியன்மார் அகதிகள்

tubetamil
0

 மியன்மார் அகதிகள் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்திற்கு நேற்று (23) மாலை 5 மணியளவில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.





முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது. பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஐமாலிய முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.






பின்னர் தஞ்சம் கோரிய 115 முஸ்லீம் இனத்தினை சேர்ந்த மியன்மார் அகதிகளும் மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தினால் இவர்களில் 103 பேர் இரண்டு பேருந்துகளில் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.






குறித்த படகில் 45 சிறுவர்கள்,24 பெண்கள்,46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளார்கள் இதனால் கடந்த 21 ஆம் திகதி  இவர்கள் மீது சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இவர்கள் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. அதில் சட்டவிரோத படகு பயணத்திற்கு செயற்பட்டதாக 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.




































































Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top