இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாட்டில் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டதால் தான் நெருக்கடிகள் ஆரம்பமாகியதாகவும் பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு சிறிது அவகாசம் வழங்குவது அவசியம் என்றும் பொதுமகன் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் கல்வித் தகைமையை விமர்சிப்பவர்கள் கடந்த தேர்தலில் தோற்றுபோனவர்களாக, பின்னடைவை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.