யாழில் துவிச்சக்கர வண்டிகளை திருடியவர் கைது!

tubetamil
0

 யாழ்ப்பாணம் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


நேற்றைய தினம் (21) காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது பல்வேறு பகுதிகளில் அவர் துவிச்சக்கர வண்டிகளை திருடிய சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரிய வந்துள்ள நிலையில் குறித்த நபர் வழங்கிய தகவலுக்கமைய 12 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், கைதான சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் நெல்லியடி பொலிஸார் ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top