நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழில் கைது!

tubetamil
0

 யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில்  பெருமளவான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை காவல் துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.




யாழ்.மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 


 20 இலட்சத்து 32ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை தருவதாகக் கூறிய சந்தேகநபர், வவுனியாவில் உள்ள நபர் ஒருவரை ஏமாற்றி பணத்தினை பெற்றுக் கொண்டுவிட்டு ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்துள்ளார்.


இந்நிலையில், யாழ்.மாவட்டம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜெய மஹா தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top