வவுனியாவில் முதலை ஒன்று கடித்ததில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - சூடுவெந்தபுலவை பகுதியை சேர்ந்த , 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே இதன்போது உயிரிழந்தவராவார்.
மாடுகளை மேய்ப்பதற்காக பவாற்குளம், சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற பெண் ஒருவர் அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப் பகுதியில் இறங்கிய போதே முதலை அவரை கடித்து இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.