கொழும்பு நோக்கி சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த நிலை!

tubetamil
0

 காலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கணவன் உயிரிழந்துள்ள நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள அதேவேளை, உயிரிழந்தவர், 38 வயதான பெத்தும் என்ற “லொக்கா” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.                தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த வேளை, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


இதன்போது, கணவன் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மனைவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top