பெண் ஒருவரை கொலை செய்வதற்காக காரில் வந்த நபர்கள் அவர் மீது மொத முட்பட்ட வேளை அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நிறை நடத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடுவெல பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் மீதுஎக்குறித்த கொலையாளிகள் அவர் மீது மோத முற்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்று (10) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்தி, தம்மைக் கொலை செய்யும் நோக்கில் வந்த கார் ஒன்று தொடர்பில் குறித்த பெண் கடுவெல பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அந்த பெண் கொடுத்த தகவலின் பேரில் கடுவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது, வாகனம் தப்பிச் சென்றுள்ளது.
அந்த நேரத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போதும், வாகனத்தை தடுக்க முடியவில்லை.
இந்தநிலையில், 38 வயதான பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.