சட்டவிரோதமான முறையில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான இலங்கை சிகரெட் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் நேற்று பிற்பகல் டுபாயிலிருந்து Fly Dubai Airlines இன் FZ-549 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் வந்ததாக தகவல் வெளியானது.
தனக்கு கிடைத்த உத்தரவின் அடிப்படையில் குறித்த சிகரெட் கையிருப்பை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுங்க அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.