கோப்பாயில் சட்டவிரோத பனை அழிப்பு - பனை அபிவிருத்தி சங்கத் தலைவர் புகார்..!

tubetamil
0

 கோப்பாய் கண்ணகை அம்மன் கோவில் பகுதியில் உள்ள காணி ஒன்றில்  11 பனைக்கு கிட்ட அளிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் கூறியுள்ளார்.



இதுவரை அனுமதிப்பத்திரம் இல்லாமலேயே  அவர்கள் குறித்த பனையை அழித்ததாகவும் ,அந்த காணியில் தற்போது அந்த பனை  மரங்கள் இல்லாமல் உள்ளதாகவும், அதனை அளித்தவர்கள் கொண்டு சென்றதாகவும் அவர் கூறினார்.



இந்த சம்பவம் தொடர்பாக அவர் கோப்பாய் பிரதேச செயலக அதிபருடன்  உரையாட முயற்சித்ததாகவும், அங்கும் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லையெனவும் சகாதேவன் மேலும் தெரிவித்தார்.



இந்த சம்பவம் தொடர்பாக அவர் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கதைத்தபோது  அங்கும் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர்  இச்சம்பவம் தொடர்பான  வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top