சமூக ஊடகங்களில் போலிப் படங்களை பரப்பியதாகக் கூறப்படும் 20 வயது இளைஞர், அனுராதபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரண்டு பெண்களின் போலி ஆடையின்றிய படங்களை உருவாக்கியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களிடையே பரவிய புகாரினைப் தொடர்ந்து, அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னணியில் குற்றச்சாட்டுக்குரிய இளைஞர் அடையாளம் காணப்பட்டு, அவர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குறித்த போலிப் படங்கள் இணையத்தில் பரவலாகப் பரப்பப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் அவற்றை அகற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.