யாழ் நூலக எரிப்பின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியா? என்பது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரனின் புதிய குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டலந்தை வதை முகாமின் சூத்திரதாரிகள் மட்டுமல்லாது, ஜூலை இனக்கலவரம் மற்றும் நாட்டில் நடைபெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களின் பின்னணியிலும் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன, பிரதமர் பிரேமதாச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்றோர் இருந்திருக்கலாம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், வதை முகாம்களால் பாதிக்கப்பட்ட தமது பிரதேசத்திற்கு எப்போது நீதி கிடைக்கும் என மக்கள் காத்துக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக 1977 முதல் 1994 வரை நாட்டை கொலைக்களமாக மாற்றியதே ஐக்கிய தேசியக் கட்சிதான் என்றும் அவர் கடுமையாக சாடினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொலைக்களமாக திகழ்ந்த பட்டலந்தை வதை முகாமின் பிரதான சூத்திரதாரியே ரணில் விக்ரமசிங்கதான் எனவும் அமைச்சர் சந்திரசேகரன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.