யாழ் நல்லூர் ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (20) மாலை 4.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.
நல்லூரானது சைவ சமயத்தின் புனிதத் தலமாக கருதப்படுகின்ற நிலையில், தலத்துக்கு அருகிலே அசைவ உணவகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.இதனை எதிர்த்தே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, அனைத்து நல்லூர் கந்தன் பக்தர்களும் ஒன்றுகூடி, இந்த அசைவ உணவகத்துக்கு எதிரான திடமான எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டுகிறோம் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.